விபத்தில் இளைஞன் பலி

மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் களுதாவளை பகுதியின் பாதசாரிக் கடவையின் அருகிலே, இன்று (23) காலை இடம்பெற்ற பாரிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலே உயிரிழந்துள்ளாரென, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்த இளைஞன், முன்னே சென்ற பிக்கப் ரக வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட வேளையில், அந்த வாகனத்தில் மோதி கீழே வீழ்ந்த போது, எதிரே வந்த இலங்கைப் போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ், மோட்டார் சைக்கிளுக்கு மேல் ஏறியமையால், இவ்விபத்துச் சம்பதித்துள்ளது.

இதில் உயிரிழந்தவர், களுதாவளையைச் சேர்ந்த 22 வயதுடைய ம.இதயராஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சடலம், தற்போது களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனியார் பஸ் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பதுடன் பஸ்ஸும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக, களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள், முற்றாக சேதமடைந்துள்ளதாகவும், இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்