தொடருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு! – சுன்னாகத்தில் சம்பவம்!!

காங்கேசன் துறையில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடருந்து மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த விபத்து சற்று முன்னர் சுன்னாகம் தொடருந்து நிலையத்துக்கு அருகில் நடந்துள்ளது.

இளைஞர் சம்பவ இடத்திலேயே தலை துண்டிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அடையாளம் காணப்படாத நிலையில் சடலம் சுன்னாகம் தொடருந்து நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்