பாதுகாப்பு தரப்பிற்கு தெளிவூட்டல்கள் அவசியம்: சர்வதேச மன்னிப்புச் சபை

மனித உரிமைகள் சட்டங்கள் தொடர்பாக இலங்கை பாதுகாப்பு தரப்பிற்கு தெளிவூட்டப்படுதல் அவசியம் என ஐ.நா. மனித உரிமை பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அமர்வு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகவுள்ள நிலையில், சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென சுட்டிக்காட்டியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, இதற்கு இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மேலும் தெரிவித்துள்ளது.

அத்தோடு, உண்மையை கண்டறியும் பொறிமுறைக்கு அவசியமான தொழிநுட்ப உதவிகளையும் இலங்கைக்கு வழங்க வேண்டுமென சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்