காங்கேசதுறை கடற்படை முகாமில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த கடற்படை வீரர் மயக்கமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்,இச்சம்பவத்தில் கண்டியை சேர்ந்த மஞ்சுள சேரத் பண்டா(வயது 38) என்பவரே உயிரிழந்தவராவர்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாது,
காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடந்த 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பயிற்சியில் ஈடுபட்டிருந்த வேளை மயக்கமுற்று வீழ்ந்துள்ளார்.மயக்கமடைந்த வீரரை கடற்படை வைத்தியர்கள் முதலுதவி வழங்கியதுடன் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம் உயிரிழந்தார்.