கேப்பாபுலவு மக்களுக்கு தமது ஆதரவை நேரில் சென்று தெரிவித்த அம்பாறை மாவட்ட உறவுகள்

முல்லைத்தீவில் தமது பூர்வீக காணிகளை மீட்கும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு அம்பாறை மாவட்ட உறவுகள் தமது ஆதரவை நேரில் சென்று தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தின் வசமுள்ள தமது பூர்வீக காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் கேப்பாபுலவு மக்கள் முன்னெடுக்கும் போராட்டம் இன்று 177 ஆவது நாளாகவும் தொடர்கின்றது.

இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை அம்பாறை மாவட்டத்தில் வருகை தந்த மக்கள் சந்தித்து போராட்டத்துக்கு தமது ஆதரவை வழங்கியுள்ளனர்.

ரணில் மைத்திரி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கம் கேப்பாபுலவு மக்களுக்கு உடனடியாக தீர்வை வழங்க வேண்டுமெனவும் அம்பாறை மாவட்ட மக்கள் வலியுறுத்தினர்

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினரும் குழுக்களின் பிரதி தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஒழுங்குபடுத்தலில் நேற்று முன்தினம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவை சந்தித்து கேப்பாபுலவு மக்கள் சிலர் கலந்துரையாடியிருந்தனர்.

அத்துடன் இராணுவத்தளபதி உள்ளிட்டவர்களை சந்தித்தும் தாம் எதிர்பார்த்த முடிவுகள் எவையும் எட்டப்படாது வழமை போன்று காலக்கேடுகளே வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்