வன்கொடுமைக்கு ஆளான 8 வயது சிறுமியை!

பெங்களூருவில் ஒரு அதிர்ச்சி சம்பவம். கடந்த புதன்கிழமை மாலை எட்டு வயது சிறுமி ஒருவர் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

தி ஹிந்து பத்திரிகையின் அறிக்கையின்படி, தன் வீட்டிற்கு வெளியில் தூங்கி கொண்டிருந்த அச்சிறுமியை, அவரது தாய்மாமன் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

இந்த கொடூரச்சம்பவம் கர்நாடகாவின் சிக்பால்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது.

தூக்கம் கலைந்து எழுந்த சிறுமியின் பெற்றோர் தங்கள் பெண் காணாமல் போனதை உணர்ந்தார்கள். தேடி பார்த்தபோது கிராமத்தின் புறநகர்ப்பகுதியில் ஒரு புதரில் அவளது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

டைம்ஸ் ஆப் இந்தியா அறிக்கையின் படி, குற்றம் சாட்டப்பட்டவர் சிறுமியின் மாமா என கூறியுள்ளது. அவர் குழந்தையை ஒரு பண்ணைக்கு எடுத்துச் சென்று, பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார்.

கர்நாடகா காவல்துறை இது தொடர்பாக வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து வருகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்