பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான நடைபயணத்தின் மூன்றாவது நாளான இன்று தற்போது முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியை குறித்த பேரணி அடைந்துள்ளது.இதன் ஒரு கட்டமாக கடந்த மாதம் இடிக்கப்பட்ட யாழ் பல்கலைக்கழக தூபியை கட்டுவதற்கு முள்ளிவாய்க்கால் நினைவு இடத்தின் மண்ணினை மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களால் மண் சமர்ப்பிக்கப்பட்டது.