பெண்ணுக்குத் தொல்லை கொடுத்த மருத்துவர்கள் கைது

கேகாலையில் பெண்ணொருவருக்குத் தொல்லை கொடுத்த இரண்டு மருத்துவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இருவரும் நேற்றிரவு கேகாலை நகருக்கு அருகில் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவரைத் தொந்தரவு செய்துள்ளனர்.

கேகாலை வைத்தியசாலையில் சேவையாற்றும் மருத்துவர்களே இவ்வாறு தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தைக் கண்ட பிரதேச வாசிகள் சம்பவம் குறித்து விசாரித்துள்ளதுடன் மருத்துவர்களைக் கேகாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மருத்துவர்கள் மது போதையில் இருந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்