அரசியல் கைதிகளின் விவகாரம்:கடும் தீர்மானம் எடுக்கப்படும் – எம்.கே. சிவாஜிலிங்கம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவில்லை என்றால், கடும் தீர்மானம் எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உட்பட வடக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும் அரசாங்கம் அதற்கு இதுவரை எந்த தீர்வையும் வழங்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி வடக்கு, கிழக்கில் கடந்த 200 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

எனினும் இது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வுகாண தமிழ் அரசியல் பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும் எனவும் எம்.கே. சிவாஜிலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்