கிளிநொச்சியில் நான்கு பிள்ளைகளின் தந்தை மீது வாள்வெட்டு

பேருந்துத் தரிப்பிடத்தில் நின்று கொண்டிருந்த நான்கு பிள்ளைகளின் தந்தை மீது நபரொருவர் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்தச் சம்பவம் கிளிநொச்சி கோணாவில் பகுதியில் இன்று காலை 8.30 மணியளவில் நடந்தது.

வாள்வெட்டில் படுகாயமடைந்தவர் கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

உழவு இயந்திரத்தில் வருகை தந்த நபரொருவரே வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தினார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சிப் பொலிஸாா் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்