84 பேரைக் கொன்ற செவிலியர் : ஜேர்மனி பொலிஸார் தெரிவிப்பு

ஜேர்மனியில் சிறையில் உள்ள ஆண் செவிலியருக்கு 84 கொலைகளுடன் தொடர்புடையதாக பொலிஸார்குற்றம்சாட்டியுள்ளனர்.

40 வயதான நீல்ஸ் ஹோகேல் என்ற ஆண் செவிலியர் மீதே பொலிஸார் குற்றம்சாட்டியுள்ளனர்.

செவிலியரான நீல்ஸ் ஹோகேல், 2015ம் ஆண்டு நகரில் உள்ள மருத்துவமனையில் விசேட சிகிச்சைப்பிரிவில் இருந்த இரண்டு நோயாளிகளுக்கு அதிகப்படியான மருந்துகள் கொடுத்து கொன்ற வழக்கில் வாழ்நாள் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் புலனாய்வாளர்கள் பல உடல்களை ஆய்வு செய்து வருவதாகவும், இதுவரை 84 கொலைக்கான ஆதாரம் கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்