யாழில் கஞ்சாவுடன் முன்னாள் ராணுவ சிப்பாய் கைது!

சாவ­கச்­சே­ரிப் பகு­தி­யில் நேற்­று­முன்­தி­னம் இரவு ஒரு­வர் கஞ்­சா­வு­டன் கைது செய்­யப்­பட்­டார். அவர் முன்­னாள் இரா­ணு­வச் சிப்­பாய்.

கொலைக்­குற்­றச்­சாட்­டில் கைது செய்­யப்­பட்டுப் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்த இவ­ரி­டம் இருந்து 3 கிலோ கஞ்சா கைப்­பற்­றப்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். கடத்­திச் செல்­லப்­பட்ட சம­யமே அவ­ரி­ட­மி­ருந்து கஞ்­சா­வைத் தாம் கைப்­பற்­றி­னர் என்­றும் தெரி­வித்­த­னர்.

யாழ்ப்­பா­ணம் பொலிஸ் நிலை­யத்­துக்­குக் கிடைத்த தக­வ­லை­ய­டுத்து யாழ்ப்­பா­ணம் மற்­றும் சாவ­கச்­சேரி பொலி­ஸார் இர­வுக் கண்­கா­ணிப்­பில் ஈடு­பட்­டி­ருந்­த­னர்.அப்­போது மோட்­டார் சைக்­கி­ளில் கஞ்­சா­வு­டன் வந்த சந்­தே­க­ந­பர் மாட்­டிக்­கொண்­டார். கைப்­பற்­றப்­பட்ட கஞ்சா சுமார் 3 லட்­சம் ரூபா பெறு­ம­தி­யா­னது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

தரைப் படைச் சிப்­பா­யான அவர் மற­வன்­பு­லோப் பகு­தி­யில் இளம்­பெண் ஒரு­வ­ரின் கொலை தொடர்­பான வழக்­கில் கைது செய்யப் பட்­டார். பின்­னர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டி­ருந்­ தார் என்று பொலி­ஸார் தெரி­ வித்­த­னர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்