சாவகச்சேரிப் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டார். அவர் முன்னாள் இராணுவச் சிப்பாய்.
கொலைக்குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இவரிடம் இருந்து 3 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர். கடத்திச் செல்லப்பட்ட சமயமே அவரிடமிருந்து கஞ்சாவைத் தாம் கைப்பற்றினர் என்றும் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்குக் கிடைத்த தகவலையடுத்து யாழ்ப்பாணம் மற்றும் சாவகச்சேரி பொலிஸார் இரவுக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் கஞ்சாவுடன் வந்த சந்தேகநபர் மாட்டிக்கொண்டார். கைப்பற்றப்பட்ட கஞ்சா சுமார் 3 லட்சம் ரூபா பெறுமதியானது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
தரைப் படைச் சிப்பாயான அவர் மறவன்புலோப் பகுதியில் இளம்பெண் ஒருவரின் கொலை தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந் தார் என்று பொலிஸார் தெரி வித்தனர்.