ஈராக்கில் இரண்டு புதைகுழிகளில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் 500 சடலங்கள் மீட்கப் பட்டுள்ளன. ஈராக்கில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.எஸ்.ஐ. எஸ். அமைப்பின் ஆதிக்கம் ஆரம்பமானது.
அந்த அமைப்பின் பிடியில் ஈராக்கின் இரண்டாவது நகரமான மோசூல் அகப்பட்டது. இது இந்த வருடத்தின் ஆரம்பத்திலேயே திரும்பக் கைப்பற்றப்பட்டது. அங்கு தற்போது பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
அவ்வாறு நடத்தப்பட்ட சோதனையொன்றில் இரண்டு மிகப்பெரும் புதைகுழிகளில் தலைதுண்டிக்கப்பட்ட நிலையில் 500 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன என்று பன்னாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.