உள்நாட்டவர்களை அழித்து வெளிநாட்டவரைப் பாதுகாக்கும் சட்டம்!!

தற்போதைய அரசால் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தேசிய வருமானவரி சட்டமூலம் வெளிநாட்டவர்களை பாதுகாத்து உள்நாட்டவர்களை அழிக்கும் ஒரு சட்டம் என்று கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களிடமும் வரியை அறிவிடும் ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றவே அரசு தீர்மானித்துள்ளது.

இலங்கையின் வரலாற்றில் வருமானவரி சட்டமூலம் தொடர்பில் மேல் நீதிமன்றத்துக்கு 10 முறைபாடுகள் தாக்கல் செய்யப்படவில்லை என்ற போதும் கூட்டு எதிரணி தற்போது மனுத் தாக்கல் செய்துள்ளது.

கூட்டுஎதிரணியின் தான் உள்ளிட்ட சிசிர ஜயகொடி, சட்டத்தரணிகள் தொழிற்சங்கம், தேசிய வருமானவரி திணைக்களத்தின் அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் இந்த 10 மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.- என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்