புகையிரதத்தில் மோதுண்ட ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பிலிருந்து, கொழும்பு நோக்கிப் புறப்பட்ட இரவு நேர புகையிரதத்தில் மோதுண்டவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்று இரவு 8.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இனம் தெரியாத இந்த ஆண் மட்டக்களப்பு திராய்மடுப் பகுதியில் வைத்து புகையிரதத்தில் மோதுண்டுள்ளார் என தெரியவந்துள்ளது.

அவரது சடலம் ரெயில்வே அலுவலர்களால் மீட்கப்பட்டு ஏறாவூர் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டதாகவும் புகையிரத நிலைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அத்துடன், உயிரிழந்தவர் தொடர்பான விவரங்களை விசாரித்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், இவரின் சடலம் ஏறாவூர் ஆதார வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்