அரசாங்கம் தான் என்னை காப்பாற்ற வேண்டும் – ஜெகத் ஜெயசூரிய

போர்க்குற்றச்சாட்டு வழக்கினை தன்மீது தொடரமுடியாது என சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.

தனியார் ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியில் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தான் என்னை காப்பாற்ற வேண்டும் – ஜெகத் ஜெயசூரிய

யுத்தத்திற்கு தலமை தாங்கி யுத்தத்தை வழி நடத்தியதாக பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா பகிரங்கமாகக் கூறி வருகின்ற நிலையில் எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கு எந்த விதமான அடிப்படை காரணங்களும் இல்லை என்று குறிப்பிட்டார்.

தற்போதை நிலமை தொடர்பில் தற்போதைய இராணுவத் தளபதி மற்றும் பாதுகாப்புச் செயலருக்குத் தெரிவித்துள்ளபோதிலும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அரசாங்கம் தான் இதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமெனத் தெரிவித்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்