அமெரிக்கா செல்கிறார் சிறிலங்கா அதிபர்

ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன, அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

ஐ.நா பொதுச்சபையின் 72 ஆவது கூட்டத்தொடர் வரும் 12ஆம் நாள் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கூட்டத்தொடரின் முக்கிய அம்சமான, உலகத் தலைவர்கள் பொதுத் தலைப்பின் கீழ் உரையாற்றும் அமர்வு வரும் 19ஆம் நாள் தொடங்கவுள்ளது.

இதில் பங்கேற்பதற்காக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் 17ஆம் நாள் நியூயோர்க்கிற்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்