அனிதாவுக்காக குரல் கொடுத்துள்ள அமெரிக்க வாழ் சிறுமி!

மருத்துவராக வேண்டும் என்ற கனவு தகர்ந்து போனதால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனிதாவின் மறைவுக்கு உலகம் முழுவதும் வாழும் தமிழர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

அந்த வகையில், அனிதாவுக்காக 9 வயதே ஆன அமெரிக்கா வாழ் தமிழ் சிறுமி ஒருவர் குரல் கொடுத்துள்ளார். இது தொடர்பில் காணொளி ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

இன்று எங்களது வீட்டுக்கு சிறப்பான நாள். எனது அப்பாவின் பிறந்தநாள், ஆனால், நாங்கள் அதை கொண்டாடவில்லை,

அனிதாவின் தந்தை பெயர் சண்முகம். எனது தந்தையின் பெயரும் சண்முகம். அதனால் தான் நாங்கள் என் தந்தையின் பிறந்தநாளை கொண்டாடவில்லை.

அனிதாவைப் பற்றி விமர்சிப்பவர்கள் அதை நிறுத்தி விட்டு, எதற்காக அவர் நீதிமன்றம் சென்றாரோ. அதற்காக நீங்களும் நீதிமன்றம் செல்லுங்கள்.

ஒரு உயிரை இழந்துள்ள இந்த நேரத்திலாவது, மற்ற மாணவர்களின் நலனைக் காக்க அவர்களுக்கு அரசு விலக்கு அளிக்க வேண்டும். யாரும் தற்கொலை செய்து கொள்ள வேண்டாம் என்று பேசியுள்ளார்.

அனிதாவுக்கு நீதி கேட்டு தமிழகம் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் வாழும் தமிழர்கள் நேற்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்கா வாழ் தமிழ் சிறுமியின் இந்த காணொளி தற்போது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்