தாக்குதல்:கணவனும் மனைவியும் மருத்துவமனையில் சேர்ப்பு

சாவகச்சேரி வடக்குப் பகுதியில் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கணவனும் மனைவியும் சாவகச்சேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

மனைவியான ஆசிரியையை (வயது-47) பொலிஸாரும் அயலவர்களும் மீட்டு நேற்று இரவு மருத்துவமனையில் சேர்ப்பித்தனர்.

”எனது நடத்தையில் சந்தேகம் கொண்டு எனது கணவரும் மகனும் இரவு மரப் பலகையால் என்னைத் தாக்கினார்கள்.

சம்பவம் தொடர்பில் அயலவர்களால் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு வீட்டுக்கு வந்த பொலிஸாரும் அயலவர்களும் மயங்கிய நிலையில் காணப்பட்ட என்னை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.” என தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியை தெரிவித்தார்.

இந்த நிலையில் ஆசிரியையையின் கணவனும் இன்று காலை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

”என்னையும் எனது மகனையும் எனது மனைவியும் வேறு ஒருவரும் சேர்ந்து தாக்கினார்கள்” என ஆசிரியையின் கணவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்