அரசை விழுத்தும் மாற்று அணி உருவாவதைத் தடுக்க முடியாது – மகிந்த!!

அரசை விழுத்தும் பலமான மாற்று அணியொன்று உருவாவதைத் தடுக்க முடியாது என்று கூறியுள்ளார் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச.

வீரகெட்டிய பிரதேசத்தில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் தெரிவித்ததாவது-

சிறிலங்கா சுதந்திரக் கட்சி எப்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்ததோ அப்போதே மாற்றுக் கட்சிக்கான தேவை ஏற்பட்டுள்ளது.

நாட்டைத் தனியார் மயப்படுத்தும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கை தெளிவாக முன்னெடுக்கப்படுகின்றது. இந்த அரசை வீழ்த்தும் பலமான அணி ஒன்று உருவாவதைத் தடுக்க முடியாது – என்றார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்