பயிற்சியில் ஈடுபடும் தென்கொரிய கடற்படையினர்

தென்கொரிய கடற்படையினர் கிழக்கு கடற்பரப்பில் இன்று பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

வடகொரியா ஆறாவது அணுவாயுதப் பரிசோதனையைத் தொடர்ந்து, கொரிய தீபகற்பம் மீதான பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், வடகொரியாவின் அணுவாயுதப் பரிசோதனைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்கொரியா நேற்று ஏவுகணைப் பரிசோதனையில் ஈடுபட்டிருந்தது.

இதன் தொடர்ச்சியாக, தென்கொரிய கடற்படையினரும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், வடகொரியாவின் ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை எதிர்நோக்கும் வகையில், பயிற்சியில் ஈடுபட்டுள்ளதாக தென்கொரிய கடற்படை வீரரொருவர் தெரிவித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்