மீசாலையில் பட்டப்பகலில் 22 பவுண் நகைகள் கொள்ளை!!

ஆள்கள் இல்லாத வீடுகளில் புகுந்த திருடர்கள் 22 பவுண் நகைகளைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

அவர்கள் திருட்டில் ஈடுபட்டபோது அந்தப் பகுதிக்கு ஆள்கள் வந்தால் தாம் கொண்டு வந்த மோட்டார் சைக்கிளையும் கைவிட்டுத் தப்பியோடியுள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10 மணியளவில் மீசாலை, பங்களா சாலையில் நடந்துள்ளது.

இந்தப் பகுதியில் உள்ள அடுத்தடுத்து உள்ள இருவீடுகளில் ஆள்கள் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் உள் நுழைந்துள்ளனர். அந்த வழியே உறவினர் வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு உள்ளே சென்று பார்த்துள்ளார். இவரைக் கண்ட திருடர்கள் மதில் பாய்ந்து பின்புறக் காணி ஊடாகத் தப்பியோடியுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

இது தொடா்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்