மைத்திரி – மகிந்தவை இணைக்க குழு நியமனம்

முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் செயற்படும், அணியினரை மீண்டும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைத்துக் கொள்வதற்கான பேச்சுக்களை நடத்துவதற்கு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவால் 3 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர்களான ஜோன் செனவிரத்ன, அனுர பிரியதர் சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோரே இதற்காக நிய மிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்வரும் நாள்களில் இணைப்புக்கான கலந்துரையாடல் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்