காணாமலாக்கப்பட்ட போராட்டத்துக்கு இடம் தரமுடியாது – கோவில் நிர்வாகம்!

காணாமலாக்கப்பட்ட உறவுகளால் கிளிநொச்சி கந்தசாமி கோவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று காலை அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

காணாமலாக்காப்பட்ட உறவுகளால் அமைக்கப்பட்ட பந்தலானது ஆலயத் திருவிழாவை முன்னிட்டு அகற்றப்பட்டதுடன், திருவிழா நிறைவடையும் வரை கோவிலுக்கு அருகிலிருந்த மண்டபத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், ஆலயத் திருவிழா நிறைவடைந்த நிலையில், அவ்விடத்தில் பந்தலிடுவதற்கான முயற்சிகளில் காணாமலாக்கப்பட்ட உறவுகள் முயற்சித்த வேளையில் ஆலய நிர்வாகத்தினர் மறுப்புத் தெரிவித்திருந்தனர்.

எனினும் குறித்த மக்கள் ஆலய நிர்வாகத் தலைவரிடம் முறையிட்ட நிலையில் மீண்டும் பழைய இடத்தில் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்