மட்டக்களப்பு: ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடிப் பொலிஸ் பிரிவிலுள்ள குக்குளாவத்தை வயல்ப் பகுதியில் ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை 10.00 மணிக்கு மீட்கப்பட்டுள்ளது.

கோயில் போரதீவு முருகன் கோயில் வீதியைச் சேர்ந்த 31 வயதுடைய கனகநாயகம் நவன் என்பவரே உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று மாலை வீட்டை விட்டு சைக்கிளில் வெளியில் சென்றுள்ளார்.

இவர் இரவு வீடு திரும்பாததை அடுத்து உறவினர்கள் இவரை தேடிய நிலையில் குக்குளாவத்தை வயல்ப் பிரதேசத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைக் களுவாஞ்சிக்குடிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்