கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயதுச் சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.இந்தத் துயரச் சம்பவம் அம்பன்பொல – தெமடவெவ பகுதியில் நடந்தது.
சிறுவனை மீட்ட பிரதேச மக்கள், குருநாகல் மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பயிர்ச் செய்கைக்காக அமைக்கப்பட்ட கிணற்றில் சிறுவர் தவறி விழுந்தான் எனத் தெரிவிக்கப்பட்டது.