முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளர் ஜயம்பதி பண்டார ஹீன்கேந்த ஆகியோரை சரீரப் பிணையில் விடுதலை செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்த காலத்தில் தனிப்பட்ட தொலைபேசி கட்டணத்தை செலுத்த அரச அச்சக கூட்டுத்தபானத்தின் பணத்தில் செலுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள் விளம்பரத்திற்கு கீழ் தொடரும்
ரம்புக்வெல்ல, தனது தொலைபேசி கட்டணத்தை செலுத்த கூட்டுத்தாபனத்தின் இரண்டு லட்சத்து 30 ஆயிரம் ரூபாவை பயன்படுத்தியுள்ளார்.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, கெஹெலிய ரம்புக்வெல்லவை 5 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன் அரச நிதி சட்டத்திட்டங்களை மீறி 8 கோடி ரூபாவுக்கும் மேல் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பணிப்பாளருக்கு எதிராகவும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழு 13 வழக்குகளை தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்குகளும் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது முன்னாள் பணிப்பாளரை 5 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.