வவுனியாவினில் மீட்கப்பட்டது ஆழ ஊடுவல் படையினதா?

இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படைப்பிரிவினரால் பயன்படுத்தப்பட்டதென நம்பப்படும் இராணுவ சீருடை வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.வீதியோரமாக வீசப்பட்ட நிலையில் குறித்த இராணுவச்சீருடை மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை வவுனியா தேக்கவத்தைப்பகுதியில் 9 ஆம் ஒழுங்கையில் விசேட அதிரடிப்படையினரின் இலச்சினையுடன் இராணுவச்சீருடை இருப்பதாக காவல்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற அவர்கள்; இராணுவ சீருடையை மீட்டுள்ளனர்.
குறித்த இராணுவ சீருடை வன்னி பகுதியினில் ஊடுருவல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என பொதுமக்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.தற்போது அவை காவல்துறையினால் மீட்டு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்