சிறு­மி வன்­பு­ணர்வு – குற்றவாளிக்கு 15 ஆண்டுகால சிறை விதித்தது வவுனியா நீதிமன்றம்

12 வய­துச் சிறு­மியை வன்­பு­ணர்ந்­த­வ­ருக்கு 15 ஆண்­டு­கள் கடூ­ழி­யச் சிறைத் தண்­டனை விதித்து வவு­னியா மேல் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­தது.

புதுக்­கு­டி­யி­ருப்­புப் பகு­தி­யைச் சேர்ந்த 53 வய­து­டை­ய­வ­ருக்கே இவ்­வாறு தண்­டணை விதிக்­கப்­பட்­டது.

இந்த வழக்கு வவு­னியா மேல் நீதி­மன்ற நீதி­பதி பாலேந்­தி­ரன் சசி­ம­கேந்­தி­ரன் முன்­னி­லை­யில் நேற்­று­முன்­தி­னம் தீர்ப்­புக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.
2012ஆம் ஆண்டு செப்­டெம்­பர் வன்­பு­ணர்வு இடம்­பெற்­றது. சிறு­மி­யின் தாயார் பொலி­ஸில் முறைப்­பாடு செய்­தி­ருந்­தார்.

சந்­தே­க­ந­ப­ரைக் கைது செய்த புதுக்­கு­டி­யி­ருப்பு பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்ட பின்­னர் முல்­லைத்­தீவு நீதி­வான் மன்­றில் முற்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர். வழக்கு விசா­ர­ணை­கள் முல்­லைத்­தீவு நீதி­வான் மன்­றத்­தில் இடம்­பெற்று வந்­தது. 6 மாதங்­கள் விளக்­க­ம­றி­யில் வைக்­கப்­பட்டு பின்­னர் சந்­தே­க­ந­பர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டார்.

கடந்த மே மாதம் சட்ட மா அதி­பர் திணைக்­க­ளத்­தால் குற்­றப்­ப­கிர்­வுப்­பத்­தி­ரம் வவு­னியா மேல் நீதி­மன்­றில் தாக்­கல் செய்­யப்­பட்டு வழக்கு விசா­ர­ணை­கள் இடம்­பெற்று வந்­தன. நேற்­று­முன்­தி­னம் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட சிறு­மிக்கு குற்­ற­வாளி இரண்டு இலட்­சம் ரூபாவை இழப்­பீ­டா­கச் செலுத்­து­மா­றும் அதைச் செலுத்­தத் தவ­றின் மேல­தி­க­மாக இரண்டு வரு­டங்­கள் கடூ­ழி­யச் சிறை அனு­ப­விக்க வேண்­டும் என­வும் தண்­ட­னைத் தீர்ப்­பில் குறிப்­பி­டப்­பட்­டது.

தண்­டப்­ப­ண­மாக 10 ஆயி­ரம் ரூபா செலுத்­து­மா­றும் அதைச் செலுத்­தத்­த­வ­றின் ஒரு மாதம் சாதா­ரண சிறைத் தண்­டனை அனு­ப­விக்க நேரி­டும் என்­றும் தீர்ப்­பில் உத்­த­ர­வி­டப்­பட்­டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்