அநுராதபுரம் நகரில் விபசாரத்தில் ஈடுபட்டு வந்த ஆறு பெண்களை கைது செய்துள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண்கள், பொதுமக்களும் வியாபாரிகளும் அருவருக்கும் வகையில் நடமாடித் திரிவதாக அநுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெற்ற முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண்கள் அநுராதபுரம், மதுகம, தம்புள்ள, புத்தளம் மற்றும் நொச்சியாகம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ளார்.