பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது

அநு­ரா­த­புரம் நகரில் விப­சாரத்தில் ஈடு­பட்­டு ­வந்த ஆறு பெண்­களை கைது செய்­துள்­ள­தாக அநு­ரா­த­புரம் பொலிஸார் தெரி­வித்­துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்கள், பொது­மக்­க­ளும் வியா­பா­ரி­க­ளும் அரு­வ­ருக்­கும் வகையில் நடமாடித் தி­ரிவதாக அநு­ரா­த­புரம் பொலிஸ் நிலை­யத்­திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பெற்ற முறைப்­பாட்டை அடுத்து பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் பெண்கள் கைது செய்­யப்­பட்­டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்­யப்­பட்­ட பெண்கள் அநு­ரா­த­புரம், மது­கம, தம்­புள்ள, புத்­தளம் மற்றும் நொச்­சி­யா­கம ஆகிய பகு­தி­களைச் சேர்ந்தவர்கள் என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களின் மூலம் தெரியவந்­துள்­ளது.

மேலும் குறித்த சம்­பவம் தொடர்­பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்னெடுத்துள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்