லண்டனில் மெட்ரோ ரயிலில் நடந்த குண்டு வெடிப்பில் பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
மேற்கு லண்டன் பார்சன்ஸ் கிரீன்ஸ் சுரங்க மெட்ரோ ரயில் நிலையத்துதில் இன்று காலை 8.21 மணிக்கு ரயிலில் திடீரென்று குண்டு வெடித்தது. இதையடுத்து பயணிகள் அலறியடித்து ஓடினர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலர் காயமடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பகுதியில் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. உடனயாக மருத்துவ உதவியாளர்கள் அங்கு வந்தனர். காயமடைந்தவர்களுக்கு அவர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். போலீசாரும் தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்துள்ளனர்.