வடமராட்சி துன்னாலையில் இன்று அதிகாலை மூவர் சிறிலங்கா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
வடமராட்சிக் கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டவேளை மணலுடன் வந்த டிப்பர் ரக வாகனம் நிறுத்தப்படாமையால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இச்சம்பவத்தின் பின்னர் ஏற்பட்ட வன்முறையில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலேயே குறித்தநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித் துறைக் காவல்துறையினருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே இக்கைது இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

