விமானப்படை தாக்குதலில் பலியான உறவுகளுக்கு மக்கள் ஒன்று திரண்டு அஞ்சலி

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 1999.09.15 அன்று சிறிலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் பலியான 24 பொதுமக்களின் 18 ம் ஆண்டு நினைவு தினம் இன்று மந்துவில் பகுதியில் சிறப்புற அனுஸ்ரிக்கப்பட்டது.

கடந்த 1999.09.15 அன்று சிறிலங்கா விமானப்படை கிபிர் விமானங்கள் புதுக்குடியிருப்பு மந்துவில் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள் பெண்கள் உட்ப்பட 24 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர் இவர்களின் 18 ம் ஆண்டு நினைவு தினம் இன்று மந்துவில் பகுதியில் அனுஸ்ரிக்கப்பட்டது.

வன்னிக்குரோஸ் தாயக உறவுகள் நினைவேந்தல் அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் உயிரிழந்த உறவுகளின் உறவினர்கள் பொதுமக்கள் நலன்விரும்பிகள் சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டு இறந்துபோன தமது உறவுகளுக்கு சுடரேற்றி மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்