எடப்பாடியாருக்கு தக்க பதில் கொடுத்த தினகரன்

நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன் என முதல் அமைச்சர் பேச்சுக்கு டிடிவி தினகரன் பதில் அளித்தார்.

அ.தி.மு.க. (அம்மா, புரட்சி தலைவி அம்மா) அணியின் வடசென்னை தெற்கு மாவட்டம் சார்பில் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் கூட்டம் சென்னை தங்க சாலை மணிக்கூண்டு அருகே நேற்று நடைபெற்றது அதில் கலந்து கொண்டு பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

எங்களை வீட்டுக்கு போக சொல்கிறார்கள். நான் வீட்டில் இருந்து கூட்டத்துக்கு வந்தேன். கூட்டம் முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடுவேன். ஆனால் அவர் (டி.டி.வி.தினகரன்) மாமியார் வீட்டுக்கு தான் செல்லப்போகிறார். அது எந்த மாமியார் வீடு? என்று உங்களுக்கே தெரியும் என பேசினார்.

இதற்கு பதில் அளித்து டிடிவி தினகரன் இன்று கூறியதாவது:-

நான் பலமுறை மாமியார் வீட்டுக்கு சென்று வந்தவன். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உறவினர் முறை வருபவர்களும் சிறைக்கு சென்றவர்கள். என் மீது சுமத்தப்பட்டுள்ள அன்னியசெலாவணி வழக்கு ஊழல் வழக்கு அல்ல.

முதலமைச்சர் தரப்பினர் ஊழல் செய்துவிட்டு அச்சத்துடன் இருக்கிறார்கள். சசிகலாவிற்கு துரோகம் செய்தவர் முதலமைச்சர் பழனிசாமி. முதலமைச்சர் பழனிசாமி தரப்பினர் அனைவரும் விட்டுக்கு செல்வது உறுதி.

ஜெயலலிதா உடல் நிலை மோசமடைந்திருந்த போது, சீனிவாசன், என்ன செய்து கொண்டிருந்தார்? இவ்வாறு அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்