வடக்கிற்கு விரையும் பசில் குழு!

எதிர்­வரும் 21, 22, 23 ஆம் திக­தி­களில் பஷில் ராஜபக் ஷ தலை­மையில் இவர்கள் யாழ்ப்­பா­ணத்­திற்கு விஜயம் செய்­ய­வுள்­ளனர். முன்னாள் வட­மா­காண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்­தி­ர­சிறி மற்றும் முக்­கி­யஸ்­தர்­களே இவ்­வாறு அங்கு செல்­ல­வுள்­ளனர்.

யாழ்ப்­பாணம் உட்­பட வடக்கில் தமது கட்­சிக்கு புதிய அமைப்­பா­ளர்­களை நிய­மிப்­பது குறித்தும் தமது கட்­சிக்­கான ஆத­ர­வினை திரட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை இந்த குழு­வினர் மேற்­கொள்­ள­வுள்­ளனர். மூன்று தினங்கள் அங்கு தங்­கி­யி­ருந்து மக்­க­ளையும் இவர்கள் சந்­தித்துக் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளனர்.

எதிர்­வரும் ஜன­வரி மாதம் நாடு தழு­விய ரீதியில் உள்­ளூ­ராட்சி தேர்தல் நடை­பெறும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இத­னை­விட மாகாண சபைத் தேர்­தல்­களும் அடுத்த வருடம் இடம்­பெறும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த நிலையில் வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவைத் திரட்டும் முகமாகவே பொது எதிரணியைச் சேர்ந்த குழுவினர் அப்பகுதிக்கு விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்