காட்டுயானைகளின் தாக்குதலில் இளைஞன் படுகாயம்!

மட்டக்களப்பு, போராதீவுப்பற்று – சின்னவத்தைக் கிராமத்தில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை காட்டு யானைகளின் தாக்குதலில் பல வீடுகள் சேதமடைந்துள்ளதுடன், இளைஞன் ஒருவர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

சின்னவத்தைக் கிராமத்தை சேர்ந்த 22 வயதான சுபாஸ்கரன் என்பவரே படுகாயமடைந்த நிலையில் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தால் குறித்த பிரதேசத்தில் பரபரப்பு நிலவியதுடன், மக்கள் ஒன்று திரண்டு சத்தமிட்டும் தீப்பந்தங்களை காட்டியும் யானைகளை காட்டிற்குள் விரட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்