வன்னியில் அமைதிக்கான இருப்பு என்ற போர்வையில் சிறிலங்கா படையினர் தங்களைப் பலப்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று சனிக்கிழமை (16) கிளிநொச்சி – பூநகரி – மன்னார் வீதியில் வேரவில் சந்தியில் இருந்து வடக்கே 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் படை அணிகள் பயிற்சி அணிவகுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டன.
இந்தப் பயிற்சியின் அணிவகுப்பு நடவடிக்கை பிரதான வீதிகள் ஊடாகவும் இடம்பெற்றது. இதில் சிறிலங்கா படையின் பல பிரிவுகள் பங்குபற்றின.
இராணுவத்தினர் தொடர்ந்தும் தமது நிலைகளை அங்கே பலப்படுத்தி வருகின்றனர் என்று பிரதேச மக்கள் கூறினர்.
வன்னியில் படையினர் தமது முகாம்களில் புதிய கட்டுமானங்களை மேற்கொண்டு அவற்றைப் பலப்படுத்தி வருகின்றனர்.
அதேவேளை, காட்டுப் பகுதிகளில் புதிய முகாம்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.