மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்க தீர்மானம்

யாழ்.மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிப்பதற்கான தீர்மானம் இன்று (18) மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது..

மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டம் இன்று யாழ்.மாவட்ட செயலகத்தில், இணைத் தலைவர்களான சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் யாழ் மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் உள்ள காணிகளை தாவரவியல் பூங்காவாக பராமரிப்பதற்கான பிரேரணையினை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முன்மொழிந்தார்.

இராணுவம் உள்ள காணிகளை தற்போது பொறுப்பேற்க முடியாத நிலையில், இராணுவம் வெளியேறி பின்னரே அதைப் பற்றி முடிவு எடுக்கவும், ஏனைய துயிலும் இல்லங்களின் காணிகளின் உரிமையாளர்கள் அடையாளம் காணப்பட்டு, பிரதேச சபைகளிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்