மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்!

12-ம் வகுப்பு மாணவி பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம் நடந்து உள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் சிகாரின் அஜித்கார்க்கில் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி பள்ளியின் முதல்வர் ஜெக்தீஷ் மற்றும் ஆசிரியர் ஜகாத் சிங்கால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு உள்ளார் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இதனால் கர்ப்பம் அடைந்த மாணவியை இருவரும் ஷாக்புராவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருகலைப்பு செய்து உள்ளனர் எனவும் தெரியவந்து உள்ளது.

மாணவி வீட்டிற்கு வந்ததும் உடல் நிலை மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது, இதனையடுத்தே வெளியுலகத்திற்கே இச்சம்பவம் தெரியவந்தது உள்ளது.

மாணவியை பெற்றோர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர், அப்போது மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதும், கருகலைப்பு செய்யப்பட்டதும் தெரியவந்து உள்ளது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட மாணவியை ஜெய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. மாணவி ஜெய்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருடைய நிலையானது மிகவும் மோசமாக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியருக்கு எதிராக போலீஸ் வழக்குப்பதிவு செய்து உள்ளது. இரு குற்றவாளிகளும் தலைமறைவு ஆகிவிட்டனர். இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸ் குற்றவாளிகளை தேடி வருகிறது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்