தியாகதீபம் திலீபனின் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வின் நான்காம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் அவரது நினைவுத் தூபியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மூத்த தலைவர் திரு கந்தையா ஸ்ரீகிருஸ்ணகுமார் மலர் மாலை அணிவித்தார்.
தொடர்ந்து மலர் அஞ்சலி நிகழ்வும் ஈகச் சுடரேற்றலும் இடம்பெற்றது.
பொது மக்கள் கலந்து கொண்டு திலீபனுக்கு மலர் வணக்கம் செலுத்தினர்.