தியாகி திலீபனின் ஆறாம் நாள் நினைவு நிகழ்வுகள் நல்லூரில்.

இந்திய அரசிடம் ஐந்தம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணா நோன்பிருந்து மரணித்த தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வின் ஆறாவது நாள் நிகழ்வுகள் இன்று காலை 8.00 மணிக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளின் போது பொது மக்கள், மாணவர்கள் எனப்பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர். தொடர்ந்து உயிர்த்தியாகம் செய்த மாவீரர்கள் மக்களுக்கு 2 நிமிடம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நினைவேந்தல் நிகழ்வுகளை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சி ஆகியன இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.    

About இலக்கியன்

மறுமொழி இடவும்