தமிழக முதல்வருக்கு புடவை அனுப்பிய 8 பேர் கைது

முதல்வருக்கும், சபாநாயகருக்கும் சேலை அனுப்பிய 8 பேரை ஈரோட்டில் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோட்டை சேர்ந்த சிலர் முதல்வர் எடப்பாடி மற்றும் சபாநாயகர் தனபாலின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்தனர். மேலும் 18 பேரை தகுதிநீக்கம் செய்து உத்தரவிட்டு விட்டு நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டினர்.

இதை மனதில் வைத்துக் கொண்டு ஈரோட்டை சேர்ந்த 8 பேர் முதல்வருக்கும், சபாநாயகருக்கும் புடவையை பார்சலாக அனுப்பினர். இதுகுறித்து விசாரணை நடத்திய போலீஸார் அந்த 8 பேரையும் கைது செய்தனர்.

தற்போது அவர்கள் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வது என்பது தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். பொதுவாக புடவை அனுப்புவது, வளையல் அனுப்புவது வடமாநிலங்களில்தான் நிகழும். தற்போது தமிழகத்தில் நிகழ்ந்துள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்