இலங்கையை சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்குமாறு இந்திய பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்ரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:
இலங்கையில் போர் நிறைவடைந்து பல வருடங்கள் கடந்து தற்போது சமாதானத்தை நோக்கி நகர்கிறது.
ஆனால் இன்று நிலவும் பன்னாட்டு அழுத்தங்கள் போரைப் போன்ற மனநிலையிலேயே இலங்கையை வைத்துள்ளது.
இந்த நிலமையிலிருந்து இலங்கையை விடுவித்து, சுயாதீனமாக செயற்படுவதற்குப் பன்னாட்டுச் சமூகம் அனுமதிக்க வேண்டும் – –என்றார்