மட்டக்களப்பு: 17 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்ட நினைவுதினம் இன்றாகும்

மட்டக்களப்பு – புதுக்குடியிருப்பில் 17 அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 27 வருடங்கள் பூர்த்தியாகின்றன.புதுக்குடியிருப்பு நினைவு தூபிக்கு முன்பாக சுடர் ஏற்றி இன்று பிற்பகல் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்வில், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி புதுக்குடியிருப்பு கிராமத்தில் 17 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்