வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் கந்தையா சிவனே சனுக்கும், முல்லைத்தீவு மாவட்ட மீனவ சங்கப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நேற்று முன்தினம் காலை முல்லைத்தீவு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
மீன்பிடி அமைச்சராகக் கடமைகளைப் பொறுப்பேற்ற சிவநேசன் மீனவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிவதற்காக இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார்.
சந்திப்பில் அமைச்சருடன், அமைச்சின் செயலாளர், கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளர், புதுக்குடியிருப்பு மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்கள் மற்றும் மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்