நெடுந்தீவு வைத்தியசாலையில் மருத்துவர்கள் இல்லை, மக்கள் பாதிப்பு

நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்தியர்கள் இன்மையால் அங்குள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

அவசர நோயாளர்கள் உடனடியாக மாற்று இடங்களுக்குக் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மரணங்கள் சம்பவிக்கக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெடுந்தீவு ஏனைய இடங்களுடனான தரைவழித் தொடர்புகள் அற்ற தனியான தீவாக உள்ளது. இங்கு வசிக்கும் 4 ஆயிரத்து 600 பேரும் மேற்படி வைத்தியசாலையையே நம்பியுள்ளனர். இந்நிலையில், இங்கு வைத்தியர்கள் இன்மையால் அந்த மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நெடுந்தீவு வைத்தியசாலைக்கு நிரந்தரமாக வைத்தியர்களை நியமிக்குமாறு அவர்கள் பல கூட்டங்களில் தெரிவித்துள்ளனர். அரசியல்வாதிகள் பலருக்கும் மகஜர்களை அனுப்பியுள்ளனர்.

ஆனால், எவருமே இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்