சிறிலங்கா – பாகிஸ்தான் படை அதிகாரிகள் சந்திப்பு

சிறிலங்காவுக்கு வருகை தந்துள்ள பாகிஸ்தான் இராணுவ உயர்மட்ட அதிகாரிகள் சிறிலங்காவின் படை அதிகாரிகளுடன் சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளனர்.

பாகிஸ்தான் – சிறிலங்கா படை அதிகாரிகளுக்கு இடையே இடம்பெறும் நான்காவது சுற்றுப் பேச்சுவார்த்தை இது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் இராணுவத்தைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் ஹபீஸ் உர் ரஹ்மான, பிரிகேடியர் சையத் இம்ரான் அக்தர், கேணல் சஜாட் அலி உள்ளிட்ட அதிகாரிகள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர். .

இச்சந்திப்பில் சிறிலங்கா இராணுவத்தின் சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் விஜேசிங்க தலைமையிலான படை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் போது கூட்டு பயிற்சிகள், ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மற்றும் பல்வேறு இராணுவ பரிமாற்ற திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்