கிளிநொச்சியில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் பலி

கிளிநொச்சியில் அறிவியல் நகரில் ரயில் மோதி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று (26) பிற்பகல் இடம்பெற்றது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற ரயில் கிளிநொச்சி அறிவியல் நகரைத் தாண்டிச் செல்ல முற்பட்ட போது அங்கு நின்ற நபர் ஒருவரை மோதியதில் அவர் உயிரிழந்தார்.

விபத்தில் இறந்தவர் யார் என இன்னம் அடையாளம் காணப்படாத நிலையில் இது தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதேவேளை, இவ் விபத்து தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற கிளிநொச்சி ஊடகவியலாளர்களுடன் சிறைச்சாலை நிர்வாகத்தினர் முரண்பட்டனர் எனக் கூறப்படுகின்றது. இதனதால் அவர்கள் செய்தி சேகரிப்பதில் பின்னடைவு ஏற்பட்டது எனவும் தெரியவருகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்