கிளிநொச்சியில் காணாமற்போனோரின் உறவினர்கள் திலீபனுக்கு அஞ்சலி

தமிழீழ மக்களின் விடுதலைக்காக தன்னுயிரை அர்ப்பணித்த அகிம்சையின் நாயகன் திலீபனுக்கு கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று (26) வணக்கம் செலுத்தினர்.

கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமது போராட்டக் களத்தில் இன்று திலீபனுக்கு வணக்கம் செலுத்தினர்.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் உள்ள போராட்டக் களத்தில் தியாகி திலீபனின் நிழற்படம் வைக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. அங்கு நினைவுரைகளும் இடம்பெற்றன.

தியாகி திலீபன் இலட்சியத்திற்காக அகிம்சை வழியில் போராடியதைப் போன்றே தாங்களும் தமது உறவினர்களை மீளப் பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் அகிம்சை வழியில் போராடி வருகின்றனர் என அவர்கள் தெரிவித்தனர்.

About காண்டீபன்

மறுமொழி இடவும்