கொலை செய்தவர்களை செய்மதி மூலம் கண்டுபிடியுங்கள் – சுவிஸ்குமார்!

வித்தியா படுகொலையின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமார் தான் வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புபடவில்லையெனவும், தான் குற்றமற்றவன் எனவும்தெரிவித்ததுடன், கொலையாளிகளை செய்மதி மூலம் கண்டுபிடிக்குமாறும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டவர்களிடம், ஏன் உங்களுக்கு தூக்குத்தண்டனை வழங்கக்கூடாது? என நீதிபதிகள் சார்பில் கேட்கப்பட்டதற்கே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அனைவரும் ஒன்றிணைந்து தாம் கொலை செய்யவில்லையென மறுப்புத் தெரிவித்தனர்.

நாங்கள் குற்றவாளிகள் அல்ல. முடிந்தால் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடியுங்கள். அத்துடன் செய்மதியின் உதவியுடன் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.

வித்தியா படுகொலை வழக்கில் 7பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய தீர்ப்பாயக் குழு ஏனைய இருவரையும் விடுதலை செய்தது.

அத்துடன், மரணதண்டனைக்கு மேலதிகமாக குற்றவாளிகள் வித்தியாவின் குடும்பத்திற்கு ஒரு மில்லியன் ரூபா பணம் வழங்கப்படவேண்டுமெனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்